Sunday 29 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

சும்மா ஒரு தகவலுக்காக... 

ஒரிஜினல்



இன்ஸ்பிரேசன்...?

இன்ஸ்பிரேசன் கதையில் இல்லை.  போஸ்டர் டிசைனில் மட்டுமே...!

Thursday 14 February 2013

கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும்

 
இது நிலவியலாளர் சு.கி. ஜெயகரன் எழுதிய நூல். இவர் நிலவியல் துறையைச் சேர்ந்தவராக இருந்த போதும் பல துறைகளில் ஆர்வமுடையவர் என்பது இந்நூலைப் படிக்கும் பொழுது புலனாகிறது; வியப்பாகவும் இருக்கிறது. அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சுற்றுச்சூழல், கென்யாவின் வங்காரி மாதய், மியான்மரின் ஆங்சான் சூகி, காமிக்ஸ், பாறை ஓவியங்கள், அணு உலை என கலந்து கட்டி எழுதியிருக்கிறார்.

Wednesday 13 February 2013

அமிலம் - ஒரு சிறுகதை முயற்சி

பாபு ஏதோ பைக் ரேஸ் போல பறந்து கொண்டிருந்தான். மனம் முந்தைய நாள் சம்பவத்தால் துவண்டு போயிருந்தது. அதை நினைக்க நினைக்கக் கடும் சினம் தலைக்கேறியது. ஆறு மாதமாக அலைந்து கடைசியில் அது இல்லையென்று ஆன பின்பு தோன்றிய எரிச்சல். கல்லூரி முதலாண்டு படிப்பவனுக்கு வேறு என்ன... காதல் தான்! திவ்யா பெரிய அழகியில்லை. இருந்தாலும் அவனுக்கு அவள் அழகு! பாபு வகுப்பில் சேர்ந்து ஒரு வாரம் கழித்துதான் திவ்யா வந்து

Friday 8 February 2013

வானில் பறக்கும் புள்ளெலாம்...


இந்நூலை தமிழின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் எழுத்தாளரும் சினிமா ஆய்வாளருமான சு. தியடோர் பாஸ்கரன் எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் வரிசையில் இது இவரது மூன்றாவது நூலாகும். புவி வெப்பமடைதலும் நிலத்தடி நீர் மட்டம் குறைவதும் ஒவ்வொரு ஆண்டும் தீவிரமாகி வரும் நிலையில் தமிழில் இது போன்ற நூல்கள் மிக அவசியமாக வாசிக்கப்பட வேண்டும். சென்ற வாரம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் வலம் வந்த போது கவனித்தால் கவிதைகள், நாவல்கள், சமையல் கலை, ஜோதிடம் மற்றும்

Saturday 2 February 2013

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டாலோ / தோல்வியடைந்தாலோ...


முன் குறிப்பு : இது மாணவர்களுக்கு மட்டுமல்ல... பெற்றோர்களுக்கும் சேர்த்து தான்.

பத்து மற்றும் +2 பொதுத் தேர்வுகளுக்காக மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் நேரமிது.  இப்பதிவின் நோக்கம் படிப்பை மட்டம் தட்டுவதன்று... மாறாகத் தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாவிட்டாலோ என்ன ஆகிவிடப் போகிறது? என்ற வினாவை எழுப்புவது!

Wednesday 23 January 2013

கீழ் கோத்தகிரி - ஒரு கானக நடை பயணம்


டிரெக்கிங் சென்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆனதால் பொங்கல் விடுமுறையில் புறப்படலாம் எனத் தீர்மானித்தோம். ஆனால் சில காரணங்களால் செல்ல முடியாததால் கடந்த சனிக்கிழமையன்று செல்வதென முடிவாயிற்று. வழக்கம்போல் அண்ணன் அம்சா தான் இந்தப் பயணத்திற்கும் ஏற்பாடு செய்தார். அது மிகச் சிறப்பான ஏற்பாடு என்பதை அந்தக் காட்டுப்பகுதிக்குப் போன பின்புதான் உணர்ந்தோம். நன்றி அண்ணன் அம்சா!