Tuesday 27 October 2015

வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

தோழர் ஏ. சண்முகானந்தம் எழுதி பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டிருக்கும் வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள் என்ற வண்ணப்படங்கள் அடங்கிய நூல் தமிழில் மிகக் குறைவாகவே வெளியிடப்படும் பசுமை இலக்கியம என்ற வகைப்பாட்டில் கவனிக்கத்தக்க நூலாகும். வலசைப் பறவைகள் பற்றிய நூல் என படிக்க ஆரம்பித்தால் சூழலியல், மானிடவியல், மார்க்சியம், சங்க இலக்கியம் மற்றும் சமூகஅறிவியல் எனப் பல தளங்களிலிருந்தும் தகவல்களைக் கொட்டிக் கடும் உழைப்பில் உருவாக்கி இருக்கிறார். எடுத்தவுடன் புத்தகத் தலைப்பிற்கேற்ப விடயங்களை அடுக்காமல் பறவைகளின் உடற்கூறியல் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிக் குறிப்புகள் வழங்கிவிட்டுப் பின்னர் தலைப்பைத் தொடர்கிறார்.