Monday 24 December 2012

சேவல்கட்டு


சேவல்கட்டைப் பற்றித் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவல்... 2011ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது வென்ற நாவல்... போன்ற காரணங்களால் இந்நாவலை வாங்கிப் படித்தேன். போத்தையா என்கிற முக்கியக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதை விரிகிறது. நாவலைப் பாதி ஃபிளாஷ்பேக் பாதி நிகழ்காலம் என்ற கலவையில் எழுதியுள்ளார் ம. தவசி. போத்தையாவின் தந்தை சேவுகன் பிரிட்டிஷ் இந்தியாவில் கிராமங்களில் வரி வசூல் செய்யும் ஜமீனாகப் பணிபுரிகிறார். அவருக்கு சேவல்கட்டின் மீது அதீத ஆர்வமேற்பட்டு அதனால் அவரது வாழ்வும் அதைத்தொடர்ந்து அவரது மகன் போத்தையாவின் வாழ்வும் எப்படிச் சீரழிந்தது என்பதுதான் நாவலின் மையக் கரு.