Friday 24 February 2012

வடநாட்டுக் களவாணிகள்


நேற்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி... வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலிஸ் சுட்டுக் கொன்றது தான். கொள்ளையர்கள் அனைவரும் வட நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து எழுச்சிமிகு போராட்டங்களை நடத்திய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே நமது தமிழ்நாடுதான் (வாழ்க! திராவிட இயக்கம்). அதை இன்றும் சிலர் வேண்டாத வேலை என்பார்கள். இந்தி தெரியாததால் நாம் தொழில்களில் அபிவிருத்தியாக முடியவில்லை! வட மாநிலங்களுக்குப் போய்
வேலைகளில் சேர முடியவில்லை என்பது போன்ற சப்பைக் காரணங்களைக் கூறுவார்கள். மேற்சொன்ன வங்கிக் கொள்ளையர்களுக்கு இந்தி நன்றாகத் தெரியும். அவர்கள் மாநிலத்திலேயே இருந்து களவுத் தொழில் செய்திருக்கலாமே! பிறகு இங்கென்ன வேலை? திராவிட இயக்கங்கள் நம்மை இந்தி படிக்க விடாமல் நம் வளர்ச்சியைத் தடுத்து விட்டனர் எனக் கூசாமல் கப்சா விடுபவர்களே! உங்களுக்குத் தெரியுமா? தொழில்துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே மூன்று முன்னணி மாநிலங்களில் நமது தமிழ்நாடும் ஒன்று. பீகாரெல்லாம் எந்த மூலையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. பணப்புழக்கம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு கொள்ளையர்கள் வருவது இயல்பு. ஏன் மற்ற இரு மாநிலங்களுக்கு செல்வதில்லை என நீங்கள் கேட்கலாம்? சென்ற வருடம் மும்பைக்கு அரசுப் பணிக்கான தேர்வெழுதச் சென்ற பீகார் மற்றும் உ.பியைச் சேர்ந்த மாணவர்கள் ராஜ் தாக்கரே ஆட்களால் உதை வாங்கி ஓடிய செய்தி உங்களில் பலருக்குத் தெரியும். அம்மாநிலங்களில் பீகார் மற்றும் உ.பி காரர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நாம் குறைந்த கூலியைக் கொடுத்து அவர்களை வரவழைக்கிறோம். பிறகு அதற்கான பலனை அனுபவிக்கிறோம்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு கோவைப்பதிப்பின் அனைத்து செய்தித்தாள்களிலும் வந்த ஒரு அருவருப்பான செய்தியை உங்களில் பலர் படித்திருக்கலாம். கோவையருகே உள்ள ஒரு தோட்டத்தில்... பிறந்து இரண்டு மாதங்களே ஆன கன்றுக்குட்டியின் வாயைக் கட்டிப்போட்டுவிட்டு அதனோடு நான்கு கபோதிகள் உறவு கொண்டு பொதுமக்களிடம் பிடிபட்டனர் என்பதுதான் அந்தச் செய்தி. அவர்கள் வேரு யாருமல்ல...! சாட்சாத் பீகார்க்காரர்கள்! எனவே எந்த வேலை வாய்ப்பானாலும் நம்மவர்களையே அதில் சேருங்கள்! வடநாட்டுப் பரதேசிகளை இறக்குமதி செய்து நமது புறநானூற்றுப் பண்பாட்டை இழக்காதீர்கள்!

1 comment:

MaduraiGovindaraj said...

உண்மைதான் !

Post a Comment