சேவல்கட்டைப் பற்றித் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவல்... 2011ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது வென்ற நாவல்... போன்ற காரணங்களால் இந்நாவலை வாங்கிப் படித்தேன். போத்தையா என்கிற முக்கியக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதை விரிகிறது. நாவலைப் பாதி ஃபிளாஷ்பேக் பாதி நிகழ்காலம் என்ற கலவையில் எழுதியுள்ளார் ம. தவசி. போத்தையாவின் தந்தை சேவுகன் பிரிட்டிஷ் இந்தியாவில் கிராமங்களில் வரி வசூல் செய்யும் ஜமீனாகப் பணிபுரிகிறார். அவருக்கு சேவல்கட்டின் மீது அதீத ஆர்வமேற்பட்டு அதனால் அவரது வாழ்வும் அதைத்தொடர்ந்து அவரது மகன் போத்தையாவின் வாழ்வும் எப்படிச் சீரழிந்தது என்பதுதான் நாவலின் மையக் கரு.
Monday, 24 December 2012
சேவல்கட்டு
சேவல்கட்டைப் பற்றித் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவல்... 2011ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது வென்ற நாவல்... போன்ற காரணங்களால் இந்நாவலை வாங்கிப் படித்தேன். போத்தையா என்கிற முக்கியக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதை விரிகிறது. நாவலைப் பாதி ஃபிளாஷ்பேக் பாதி நிகழ்காலம் என்ற கலவையில் எழுதியுள்ளார் ம. தவசி. போத்தையாவின் தந்தை சேவுகன் பிரிட்டிஷ் இந்தியாவில் கிராமங்களில் வரி வசூல் செய்யும் ஜமீனாகப் பணிபுரிகிறார். அவருக்கு சேவல்கட்டின் மீது அதீத ஆர்வமேற்பட்டு அதனால் அவரது வாழ்வும் அதைத்தொடர்ந்து அவரது மகன் போத்தையாவின் வாழ்வும் எப்படிச் சீரழிந்தது என்பதுதான் நாவலின் மையக் கரு.
Labels:
சேவல்கட்டு,
புத்தகங்கள்
Friday, 13 April 2012
தெங்குமரஹாடா - ஒரு சிலிர்ப்பான பயணம்
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தெங்குமரஹாடா செல்ல வேண்டுமென்று ஆசை. ஆனால் நிறைவேறவே இல்லை. முதல் காரணம் அங்கு ஜீப் போன்ற பெரிய வாகனங்கள் இருந்தால்தான் செல்ல முடியும். நமக்கு ஜாதகத்தில் நான்கு சக்கர வாகனப் ப்ராப்தி கிடையாது. பேருந்து வசதி இருக்கிறது. ஆனால் அது வரும் சரியான நேரம் தெரியாது. அங்கு தங்குவதற்கு விடுதிகளும் கிடையாது. ஒரே ஒரு வன இலாகா விடுதி மட்டும் உள்ளது. அதற்கு டி.எஃப்.ஓ விடம் அனுமதி பெற வேண்டும். இத்தனை இடர்ப்பாடுகளையும் கடந்து இப்பயணத்தைச் சாத்தியமாக்கியவர் அண்ணன் அம்சா. எனது நீண்ட கால நண்பர். இவர் பலமுறை அங்கு சென்றுள்ளார். இவர் கால் பதிக்காத இடமே அங்கு இல்லையென சொல்லுமளவிற்கு தெங்குமரஹாடாவுடன் நல்ல பரிச்சயமுள்ளவர். முதலில் எங்களோடு வேறு இரண்டு நண்பர்களும் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் வராததால் நாங்கள் இருவர் மட்டுமே புறப்பட்டோம்.
Labels:
கானக நடை,
தெங்குமரஹாடா,
பயணம்
Tuesday, 13 March 2012
SILVER STREAK (1976) - ஓடும் இரயிலில் ஒரு த்ரில்லர்
Labels:
திரைப்படங்கள்,
த்ரில்லர் சினிமா
Friday, 9 March 2012
பேருந்துப் பயணம் - என்றும் கசப்பான அனுபவம்
நேற்று கோவைக்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு திருப்பூருக்குப் புறப்படும் பொழுது பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. ஆனால் கோவை நகருக்குள் அவினாசி சாலையில் ஒவ்வொரு நிறுத்தமாக நிற்க நிற்கக் கூட்டம் எகிற ஆரம்பித்தது. நான் மூன்று சீட்டில் ஜன்னலோரத்திலிருந்து மூன்றாவது ஆளாக இடையில் உள்ள கம்பியோடு கம்பியாக ஒட்டி உட்கார்ந்து வந்தேன். ஏனெனில் என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருவருமே சற்று குண்டு. நான் ஒல்லியாக இருந்ததால்தான் அங்கே உட்கார முடிந்தது. ஒவ்வொரு நிறுத்ததிலும் ஏறிய நபர்கள் இருக்கைகள் நிறைந்து விட்டால் பேருந்தின் இடையிலுள்ள கம்பியில் சாய்ந்து நிற்கவாவது இடம் கிடைக்குமா என எதிர்பார்ப்பது வழக்கம். அப்படி ஒருவர் நான் கையைச் சுற்றியுள்ள கம்பியில் சாய வந்தார். உடனே நான், அவரிடம் 'இடப் பற்றாக்குறையால் கம்பி மேல் கையை வைத்து உட்கார்ந்து வருகிறேன்... சற்று தள்ளி நில்லுங்கள்!' என்றேன். அவர் கடுப்பாகி, 'கூட்டத்தில் அப்படி தான் நிற்க முடியும்...! வேணும்னா கையை எடுத்துட்டு உட்காரு(ங்கள்)' என்றார். அடைப்புக்குறிக்குள் உள்ள 'ங்கள்' என் மனத் திருப்திக்காக நானாக சேர்த்துக் கொண்டது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!... பாவம் அவரே வேலை முடிந்து களைப்பாக வீட்டிற்க்குப் போய்க் கொண்டிருக்கிறார். எனது கோபமெல்லாம் நமது அரசு நிர்வாக அவலட்சணத்தின் மீதும் நமது அதீதமான மக்கள் தொகையின் மீதும் தான். சென்ற வருடம் டிசம்பர் மாதம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூர் சென்று வந்தார். அவரிடம் சிங்கப்பூரைப் பற்றிப் பல்வேறு விசயங்களைப் பேசும் பொழுது பேருந்துப் பயணத்தைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்... காலையில் மக்கள் வேலைக்குச் செல்லும் நேரங்களில் மட்டும் சிறிது நெரிசலாக இருக்கும்... மற்ற நேரங்களில் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் இருக்கும் என்றார் (பட உபயம் : கூகுள் இமேஜஸ்). நெரிசல் என்பது நம்மூரைப் போல் நானூறு பேர் அல்ல... நான்கைந்து பேர் நின்று கொண்டு வருவார்கள். அவ்வளவுதான்!
இது எப்படி சிங்கப்பூரில் மட்டும் சாத்தியமாகிறது?. நமது பாரதப் 'புண்ணிய' பூமி ஏன் இப்படி இருக்கிறது என இணையத்தில் தேடினால் சில விவரங்கள் கிடைத்தன. இனிவரும் வாசகங்களை 'ரமணா' விஜயகாந்த் பாணியில் படிக்கவும்! சிங்கப்பூரின் மொத்தப் பரப்பளவு வெறும் 710 ச.கி.மீ தான். மக்கள் தொகை 2011ம் ஆண்டு நிலவரப்படி தோராயமாக 51,82,000. அதாவது ஒரு ச.கி.மீட்டருக்கு 7300 பேர். இவ்வளவு நெருக்கடி நிறைந்த ஊரை அந்நாட்டு அரசாங்கம் எவ்வளவு அழகாக நிர்வகிக்கிறது. நம் நாட்டில் ஒரு ச.கி.மீட்டருக்கு 364 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இதைத் திறமையாக நிர்வாகம் செய்ய முடியமா? முடியாதா...? பூமியில் நாம் அன்றாடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, கோடிக்கணக்கில் நமது வரிப்பணத்தைச் செலவு செய்து சந்திரனுக்குச் செயற்கைக் கோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசும் வரை... நாம் பேருந்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி நின்றபடியே பயணிப்போம்!. வேறு என்ன செய்ய?
Labels:
அனுபவம்,
கோபம்,
பேருந்துப் பயணம்
Thursday, 8 March 2012
பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்
இன்று உலக மகளிர் தினம். வ. கீதா மற்றும் கிறிஸ்டி சுபத்ரா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கும் இப்புத்தகத்தைப் படித்து வெகு நாட்களாகின்றன. இருந்தாலும் இன்று அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும். இப்புத்தகத்தின் மைய இழை, ஆண்களை வில்லனாகவும் பெண்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும் சித்தரிப்பதாகும். அதில் ஒரு சில கருத்துகளில் சிறிது நியாயம் இருக்கலாம். அதிலும் பெரும்பான்மையான விசயங்கள் 19ம் நூற்றாண்டோடு முடிவடைந்துவிட்டன.
Labels:
கிறிஸ்டி சுபத்ரா,
புத்தகங்கள்,
வ. கீதா
Wednesday, 7 March 2012
FLY AWAY HOME (1996) - பரவச சினிமா
நியூசிலாந்தில் நடக்கும் ஒரு சாலை விபத்தில் சிறுமி ஏமியும் (அன்னா பகுய்ன்) அவள் தாயும் சிக்கிக் கொள்கிறார்கள். தாய் இறக்கிறாள். ஏமியை அவள் தந்தை தாமஸ் (ஜெஃப் டேனியல்ஸ்) தன் சொந்த நாடான கனடாவிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஏமியின் தந்தையுடன் அவரது தோழி சூசனும் இருக்கிறாள். ஆரம்பத்தில் ஏமிக்கு அவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லை. அவள் தந்தை வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் தனது சொந்தப் பட்டறையில் வேலை செய்கிறார். பட்டறை என்றால்... க்ளைடர் விமானகள், பெரிய சிலைகள் செய்யும் இடம். அவர்கள் வசிப்பது ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பண்ணை வீடு. பக்கத்திலேயே ஒரு குளமும் அதில் கனடா கூஸ் எனப்படும் காட்டு வாத்துகளும் இருக்கின்றன. அவை குளிர் காலத்தில் இனப்பெருக்கத்திற்காக கனடாவின் வடக்குப்பகுதியிலிருந்து தெற்குப்பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் வருகின்றன. ஒருநாள் அந்தக் குளம் இருக்குமிடத்தில் கட்டிட வேலைகளைத் தொடங்குவதற்காகப் புல்டோசருடன் வரும் ஆட்கள் மரங்களை வெட்டுகின்றனர். குளத்தில் விழும் மரங்களால் வாத்துகளின் வாழிடம் பாதிக்கப்படுகிறது. அவைகள் வேறு இடம் நோக்கிப் பறக்கின்றன.
Labels:
கிளாசிக் சினிமா,
திரைப்படங்கள்
Tuesday, 6 March 2012
கோடுகளும் வார்த்தைகளும்
ஓவியம் வரையாவிட்டாலும் அதன் மீது எனக்கு ஓர் ஈடுபாடு உண்டு. அதன் விளைவாக பிரபல ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் மேற்கண்ட புத்தகத்தை வாங்கினேன். ஓவியத்திற்குப் பின்னால் இத்தனை தகவல்களா என வியக்க வைக்கும் புத்தகம். இது ஏதோ ஓவியங்களைப் பற்றிய புத்தகம் மட்டுமல்ல... மருதுவின் பால்ய கால நினைவுகள், திரைப்படக்கலையின் நுணுக்கங்கள், அனிமேசன், காமிக்ஸ் உலகம், 'நடிகவேள்' எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் மற்றும் விடுதலைப்புலிகளின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவரான மறைந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரைப்பற்றிய சுவையான புதிய தகவல்களும் உள்ளடக்கியது.
Labels:
ஓவியம்,
ட்ராட்ஸ்கி மருது,
புத்தகங்கள்
Monday, 5 March 2012
THE MANCHURIAN CANDIDATE (1962) - அரசியல் சைக்கோ த்ரில்லர்
1952ல் நடந்த அமெரிக்க - கொரிய யுத்தத்தின் போது சிக்கிய அமெரிக்க வீரர்கள் சிலரை சீனாவின் மஞ்சுரியா என்ற இடத்திற்குக் கொண்டு சென்று ஹிப்னாடிசம் செய்து மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகின்றனர். அவர்களில் ஒருவன் தான் ரேமண்ட் ஷா (லாரன்ஸ் ஹார்வி). அவன் சீட்டுக்கட்டில் உள்ள சிவப்பு ராணி (டயமண்ட் மட்டும்) சீட்டைப் பார்த்தால் ஹிப்னாடிச நிலைக்குச் சென்று விடுவான். அதன் பிறகு என்ன கட்டளையிட்டாலும் செய்து முடிப்பான். கொடுக்கப்பட்ட வேலை முடிந்தவுடன் சுய நினைவிற்கு வந்தாலும் அவன் மயக்க நிலையில் செய்த வேலைகள் ஞாபகத்திற்கு வராது. அவனை அமெரிக்காவில் இயக்கும் பொறுப்பு மிசஸ். செலின் (ஏஞ்சலா லேன்ஸ்பரி) என்ற கம்யூனிஸ்ட் பெண்ணிடம் கொடுக்கப்படுகிறது. அவள் வேறு யாருமல்ல ஷாவின் அம்மா தான். அவள் தன் இரண்டாவது கணவனான செலினை ஜனாதிபதியாக்கி விட்டால் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என திட்டமிடுகிறாள். அதற்குத் தன் மகனையே சதி வேலைகளில் ஈடுபடுத்துகிறாள்.
Labels:
திரைப்படங்கள்,
த்ரில்லர் சினிமா
Sunday, 4 March 2012
வடிவேலு - வைகைப் புயல் மீண்டும் வருமா?
நேற்று திருப்பூர் இரயில் நிலையத்தின் முகப்பில் மேற்கண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு நோட்டு, புத்தகங்கள் விற்கும் கடையின் பென்சில் ஆஃபர் விளம்பரம். எத்தனையோ நடிகர்கள் இருக்க, தற்காலிகமாக தமிழ்த் திரையுலகம் மறந்து போன வடிவேலுவின் முகம் தான் அந்தப் பலகை வைத்தவருக்கு ஞாபகத்தில் உள்ளது. இதுதான் வடிவேலுவின் பலம்.
Labels:
வடிவேலு
Friday, 2 March 2012
திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்
முன் குறிப்பு : பாரதியை அதீதமாக நேசிப்பவர்கள் தயவுசெய்து மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
வாலாசா வல்லவன் என்ற செ. சேகர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை வாங்கி மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தாலும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இந்நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும்.
பாரதி என்றவுடன் நமது மனதில் தோன்றும் பிம்பம்... முறுக்கிய மீசை, கூர்விழிப் பார்வை, தேஜசான முகம், தைரியமான குணம் மற்றும் தன் சொந்த சாதியையே சாடும் முற்போக்குக் கவிதைகள் ஆகியவை. இதற்குக் காரணம் நமது ஊடகங்களில் நீண்ட காலமாக வெளியான பாரதியின் ஓவியங்கள், அவரின் கவிதைகள் மற்றும் திரைப்படங்களில் பாரதியாக நடித்த எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு போன்றவைதான். இந்தப் பிம்பங்களை ஒவ்வொன்றாக வலுவான ஆதாரங்களுடன் தகர்த்தெறிகிறது இந்நூல்.
Labels:
பாரதியார்,
புத்தகங்கள்
Thursday, 1 March 2012
RED SUN (1971) - விறுவிறுப்பான கௌபாய் சினிமா
1870ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க ஒரு ஜப்பானியத் தூதரும் அவருக்குப் பாதுகாப்பாக நான்கு சாமுராய் வீரர்களும் ஒரு ரயிலில் வருகிறார்கள். அதே ரயிலில் பொற்காசு மூட்டைகளும் பலத்த பாதுகாப்போடு இணைக்கப்பட்டுள்ளன. அந்த ரயிலை லிங்க் (சார்லஸ் பிரான்சன்) மற்றும் காட்ச் (ஆலன் டெலான்) என்ற இரண்டு கொள்ளையர்கள் தங்கள் சகாக்களுடன் கொள்ளையடிக்கின்றனர். அப்பொழுது ஜனாதிபதிக்குப் பரிசளிப்பதற்காக ஜப்பானியத் தூதர் கொண்டு வந்திருக்கும் விலையுயர்ந்த தங்க வாளையும் பறித்துக் கொண்டு சாமுராய் வீரன் ஒருவனையும் கொல்கின்றனர். கொள்ளை முடிந்து கிளம்பும் காட்ச், லிங்கிற்குப் பங்கு தரக் கூடாது என்ற எண்ணத்தில் அவனைக் கொல்ல முயல்கிறான். லிங்க் தப்பித்து விழும் பொழுது மயக்கமடைகிறான். அவன் இறந்து விட்டதாக நினைக்கும் காட்ச் கொள்ளை முடிந்து தனது இடத்திற்க்குப் புறப்படுகிறான்.
Labels:
கௌபாய் சினிமா,
திரைப்படங்கள்
Friday, 24 February 2012
வடநாட்டுக் களவாணிகள்
நேற்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி... வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலிஸ் சுட்டுக் கொன்றது தான். கொள்ளையர்கள் அனைவரும் வட நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து எழுச்சிமிகு போராட்டங்களை நடத்திய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே நமது தமிழ்நாடுதான் (வாழ்க! திராவிட இயக்கம்). அதை இன்றும் சிலர் வேண்டாத வேலை என்பார்கள். இந்தி தெரியாததால் நாம் தொழில்களில் அபிவிருத்தியாக முடியவில்லை! வட மாநிலங்களுக்குப் போய்
வேலைகளில் சேர முடியவில்லை என்பது போன்ற சப்பைக் காரணங்களைக் கூறுவார்கள். மேற்சொன்ன வங்கிக் கொள்ளையர்களுக்கு இந்தி நன்றாகத் தெரியும். அவர்கள் மாநிலத்திலேயே இருந்து களவுத் தொழில் செய்திருக்கலாமே! பிறகு இங்கென்ன வேலை? திராவிட இயக்கங்கள் நம்மை இந்தி படிக்க விடாமல் நம் வளர்ச்சியைத் தடுத்து விட்டனர் எனக் கூசாமல் கப்சா விடுபவர்களே! உங்களுக்குத் தெரியுமா? தொழில்துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே மூன்று முன்னணி மாநிலங்களில் நமது தமிழ்நாடும் ஒன்று. பீகாரெல்லாம் எந்த மூலையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. பணப்புழக்கம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு கொள்ளையர்கள் வருவது இயல்பு. ஏன் மற்ற இரு மாநிலங்களுக்கு செல்வதில்லை என நீங்கள் கேட்கலாம்? சென்ற வருடம் மும்பைக்கு அரசுப் பணிக்கான தேர்வெழுதச் சென்ற பீகார் மற்றும் உ.பியைச் சேர்ந்த மாணவர்கள் ராஜ் தாக்கரே ஆட்களால் உதை வாங்கி ஓடிய செய்தி உங்களில் பலருக்குத் தெரியும். அம்மாநிலங்களில் பீகார் மற்றும் உ.பி காரர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நாம் குறைந்த கூலியைக் கொடுத்து அவர்களை வரவழைக்கிறோம். பிறகு அதற்கான பலனை அனுபவிக்கிறோம்.
மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு கோவைப்பதிப்பின் அனைத்து செய்தித்தாள்களிலும் வந்த ஒரு அருவருப்பான செய்தியை உங்களில் பலர் படித்திருக்கலாம். கோவையருகே உள்ள ஒரு தோட்டத்தில்... பிறந்து இரண்டு மாதங்களே ஆன கன்றுக்குட்டியின் வாயைக் கட்டிப்போட்டுவிட்டு அதனோடு நான்கு கபோதிகள் உறவு கொண்டு பொதுமக்களிடம் பிடிபட்டனர் என்பதுதான் அந்தச் செய்தி. அவர்கள் வேரு யாருமல்ல...! சாட்சாத் பீகார்க்காரர்கள்! எனவே எந்த வேலை வாய்ப்பானாலும் நம்மவர்களையே அதில் சேருங்கள்! வடநாட்டுப் பரதேசிகளை இறக்குமதி செய்து நமது புறநானூற்றுப் பண்பாட்டை இழக்காதீர்கள்!
Labels:
கோபம்
Saturday, 18 February 2012
கூடங்குளம் - காலத்தின் கட்டாயம்
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. அணு உலைக் கழிவால் தற்போது இருக்கும் மக்கள் மட்டுமல்ல... வருங்கால சந்ததியினரும் சேர்த்துதான் பாதிப்புகுள்ளாவர்கள் என்பது தான் போராட்டக்குழு முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு. இதற்கு அவர்கள் காட்டும் உதாரணம் ரஷ்யாவில் நடந்த செர்னோபில் அணு உலை விபத்து. இது நடந்தது 1986ல். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு. 25 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் இல்லாமல் பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்த ரஷ்யர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நாட்டில் திறந்த வெளியில் யாரும் மல ஜலம் கழிப்பதில்லை. ஆனால் நம் நாட்டில்...?. இந்த சிறிய பொது சுகாதாரத்தில் கூட தரமில்லாத நாம் அணு உலைப் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது!
நமது வரிப்பணம் சுமார் 14000 கோடியைக் கொட்டி இறைத்திருக்கும் அணு உலையைச் சப்பைக் காரணங்களைச் சொல்லி மூடச் செய்வதில் எந்த நியாயமுமில்லை. முதலில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என ஆரம்பமான மின் வெட்டு தற்பொழுது பத்து மணி நேரமாக மாறியுள்ளது. சில இடங்களில் பதிமூன்று மணி நேரம். இதனால் சிறு தொழில்கள் முடங்கி... அதை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் தொடர் மின் வெட்டைக் கண்டித்துக் கோவையில் திரண்ட கூட்டமே இதற்கு சாட்சி.
நமது மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து கூடங்குளம் அணு உலை செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டக் குழுவினர் ... 'உங்கள் பகுதியில் அணு உலை வந்தால்தான் தெரியும் அதன் பாதிப்பு என்னவென்று...' என்கிறார்கள். அணு உலை ஒன்றும் பெட்டிக்கடையல்ல... முச்சந்திக்கு முச்சந்தி வைப்பதற்கு. அதற்கென்று பிரத்யேகமான புவியியல் அமைப்பு வேண்டும். அது கூடங்குளத்தில் பொருந்தி வருகிறது.
தேநீரில் ஆரம்பித்து உயர்தர அறுசுவை உணவு விடுதி வரை நாம் கூறுகட்டி அடிக்கும் உணவுகளில் கலப்படமில்லாத வகைகளே கிடையாது. ஒரு சில மெஸ்கள் மட்டுமே விதிவிலக்கு. இப்படி அன்றாடம் நாம் புழங்கும் பல விசயங்களுக்கு ஒரு போராட்டமில்லை. என்னவென்றே தெரியாத அணு உலைக்கு எதிராக வேட்டியை மடித்துக் கொண்டு நிற்கிறோம். கூடங்குளம் அணு உலையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என போராட்டங்கள் தீவிரமாகும் நாள் வெகு தொலைவில்லை.
பின் குறிப்பு :- இந்தப் பதிவு கூட மின்வெட்டு நேரத்தில் யு.பி.எஸ். உதவியால் பதிவிடப்பட்டுள்ளது.
Labels:
கூடங்குளம்
Sunday, 12 February 2012
திருப்பூர் புத்தகக் கண்காட்சி - சில அனுபவங்கள்
தொடர் வேலைப் பளு காரணமாக பதிவு போட முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. எனினும் தொடர்ந்து பதிவு போட முயற்சி செய்கிறேன்.
சென்ற ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெற்ற 9வது திருப்பூர் கண்காட்சிக்கு மூன்று முறை சென்றேன். இயற்கை வரலாறு அறக்கட்டளையின் கானுயிர் புகைப்படக் கண்காட்சி அரங்கும் இடம் பெற்றிருந்தது. புகைப்படங்களும் மிகச் சிறப்பாக இருந்தன. பள்ளி மாணவர்கள் பலர் வியப்புடன் புகைப்படங்களைப் பார்த்து ரசித்தனர்.
எப்பொழுதும் புத்தகக் கண்காட்சியில் இரண்டாயிரம் ரூபாய்க்காவது புத்தகங்கள் வாங்குவேன். ஆனால் இந்த முறை மிகக் குறைவாகவே வாங்கினேன். காரணம் ஏற்கனவே வாங்கிய புத்தகங்களில் பெரும்பாலானவற்றை இன்னமும் திறந்து கூடப் பார்க்கவில்லை. அவைகளை சும்மாவேனும் அடுக்கி வைத்து என்ன பயன்?. மேலும் புத்தகக் கண்காட்சி முழுவதும் சுற்றி வந்து பார்த்தால் தொண்ணூற்றியைந்து விழுக்காடு புத்தகங்களால் ஒரு பயனும் இல்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. காகிதத்திற்குப் பிடித்த கேடு எனத் தோன்றுகிறது.
புத்தகங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தன்னம்பிக்கைப் புத்தகங்கள், ஜோதிடம், சமையல் குறிப்புகள், ஆன்மிகம், பணம் சம்பாதிப்பது எப்படி? போன்ற வகையறக்களாகவே உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட சில புத்தகங்களை வாங்கினேன். ஏதாவது தேறுமா என்று பாருங்களேன்.
1) கனவுகளின் விளக்கம் - சிக்மண்ட் ஃபிராய்ட் - தமிழில் : நாகூர் ரூமி
2) காசு ஒரு பிசாசு - கலையரசன்.
3) வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள் - வெ. நீலகண்டன்
4) ஊர்சுற்றிப் புராணம் - ராகுல் சாங்கிருத்யாயன்
5) ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் - மால்கம் க்ளேட்வெல் - தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
6) சினிமா வியாபாரம் - சங்கர் நாராயணன்
7) கொத்து பரோட்டா - சங்கர் நாராயணன்
8) அழிக்கப் பிறந்தவன் - யுவ கிருஷ்ணா
9) ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி
Labels:
புத்தகக் கண்காட்சி,
புத்தகங்கள்
Subscribe to:
Posts (Atom)